search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடி மின்னல்"

    • மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது.
    • திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் லேசான மழை பெய்தது. அப்போது நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மின்னலுடன் கூடிய இடி இடித்தது. இதில் மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இருந்த போதும் கீழ் மயிலம், ராஜீவ்காந்தி நகருக்கு மின்சாரம் வரவில்லை. இது தொடர்பாக இன்று காலை மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பலத்த இடி, மின்ன லால் கீழ் மயிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனை சரிசெய்ய நடவடி க்கைகள் எடுக்க ப்பட்டு வருகிறது. இன்று மாலை 3 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என கூறினர். திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாயினர்.

    • தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
    • ஒரே நாளில் 114 மி.மீ. கனமழை பதிவானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களா கவே வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் தொடங்கும் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடித்தது.

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்தது.

    இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்தா லும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.தஞ்சையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது.

    மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் இரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்கு ளத்தில் 24.70 மி.மீ. மழை பதிவானது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    குருங்குளம் -24.70,

    பட்டுக்கோட்டை -16,

    தஞ்சாவூர் -14,

    அதிராம்பட்டினம் -13.70,

    வெட்டிக்காடு -13,

    திருக்காட்டுப்பள்ளி -9.

    மாவட்டத்தில் ஒரே நாளில்

    114.60 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

    • சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.
    • திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. இந்த நிலை யில் சங்கராபுரம் பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

    இதனால் சங்கராபுரம் பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதே போல் பகண்டை கூட்டு ரோடு, அரியலூர், வானபுரம், பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

    • விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் வெளுத்து மழை வாங்கியது.
    • பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் நேற்று இரவு விழுப்புரம் மற்றும் விழுப்பு–ரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி, வானில் கருமயங்கள் சூழ்ந்து, இரவு திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    தற்போது பெய்த மழையினால் வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்கள் அனைவரும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கினார். பருவநிலை மாற்றத்தின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மழை மற்றும் வெயில் மாறி மாறி அடிக்க தொடங்குகிறது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விழுப்புரம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளான வளவனூர் விக்கிரவாண்டி கோலியனூர் கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ராஞ்சி :

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம், சிங்பும் மாவட்டதில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கண்டசோல் மற்றும் கர்மதா எனும் கிராமங்களில் மழை பொழிந்துகொண்டிருந்த போது வயல்களில் வேலை பார்த்துகொண்டிருந்த ஒரு பெண் உள்பட இருவர் மின்னல் தாக்கி பலியாகியதாகவும், கட்சிலா எனும் பகுதியில் ஒரு பெண் உள்பட இருவர் இடி தாக்கி பலியாகினதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
    சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சங்ககிரியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை இடி-மின்னலுடன் நீடித்தது. இதில் ஓமலூர், சங்ககிரி, வீரகனூர், ஆத்தூர் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது. ஆனால் சேலத்தில் தூரலுடன் மழை நின்றதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஓமலூரில் அதிகபட்சமாக 19.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரியில் 17.4, வீரகனூர் 16, ஆத்தூர் 12.4, தம்மம்பட்டி 7.2, எடப்பாடி 7, ஆனைமடுவில் 6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 85.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் நேற்று மாலை அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து அங்கு ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×